11 பிப்ரவரி, 2012

பீமா: கல்வியே




பணம் இருப்பவனிடம் குணம் இருப்பதில்லை ;
குணம் இருப்பவனிடம் பணம் இருப்பதில்லை.


சிலருக்கு செல்வம் வந்துதால் வணக்கத்திற்கு தடை அல்லது
குறை ஏற்பட்டு விடுகிறது.


''இறைவிசுவாசிகளே! உங்கள் செல்வமும் பிள்ளைகளும்
இறைவனின் நினைவை விட்டும் உங்களை திசைதிருப்பிவிட வேண்டாம்''


*தஃலபா (ரலி): பள்ளியிலே கிடந்து ‘பள்ளிப் புறா’ என்று பெயர் எடுத்தவர்.
வறுமை அவரை வாட்டியது . வளமான வாழ்க்கை கிடைக்க துஆ செய்யும்படி வள்ளல் நபியிடம் வேண்டினார்.
வறுமை நீங்கியது ஆடுமாடுகள் பெருகின செல்வம் பெருகியது.
என்ன செய்திருக்க வேண்டும் அந்த தோழர்?
வணக்கம் அதிகமாயிருக்க வேண்டுமா இல்லையா?
5 வக்துக்கு மட்டும் வந்தார்.
இன்னும் செல்வம் சேர்ந்தது.வாரத்தில் ஒருநாள் மட்டும்
வந்துபோனார். இன்னும் செல்வம் சேர்ந்தது.. பள்ளியின் பக்கமே
ஆளைக் கானோம்.
எந்த நேரமும் செல்வத்தை சேர்த்துக்கொண்டு
பணங்காசுகளை எண்ணிக்கொண்டு அதேவேலையாக அலைந்தார்.
ஏழைகளுக்கான ஜக்காத்தைக்கூட தர மறுத்தார்.۔......


அமெரிக்காவின் அயல்நாட்டு அமைச்சராக இருந்தவர் ஜார்ஜ் மார்ஷல்.
அவர் இந்த உன்னதமான பதவியை அடைந்ததற்கு என்ன காரணம்?
அவர் ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்கியதில்லை.
கிடைக்கம் நேரமெல்லாம் புத்தகங்கள் படித்து அறிவைப் பெருக்கிக் கொண்டார். எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும் புத்தகங்கள் படிக்காமல் ஒருநாள் கூட தூங்கியதில்லை.
அவருடைய படுக்கைக்கு அருகில் இரண்டு மேஜைகள் நிறைய புத்தகங்கள்
நிரம்பி கிடக்கும். தூங்கும்வரை படிப்பார். தூங்கி எழுந்ததும் அவருடைய கை புத்தகத்தின் மீதுதான் பாயும்.


(இன்னும் பல…..)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் Part - 2

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள்  part 2 தனித்து இயங்குவதை விட கூட்டு முயற்சி  Team Work நல்ல பலனையும் வெற்றியையும் ...